குடியிருப்பு வாசிகள் குப்பைகளில் இருந்து பையோகேஸ் தயாரிக்க கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்- மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில்  100 சதவிகிதம் குப்பைகளை தரம் பிரித்து சேகரம் செய்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் 4,041 நகரங்களின் 100 சதவிகிதம் குப்பைகளைத் தரம் பிரித்து சேகரம் செய்ய மத்திய நகர்புற வளர்ச்சி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்பட்டு வருகிறது. இதனை மேலும் மேம்படுத்தும் வகையில் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் 100 சதவீதம் குப்பைகளைத் தரம் பிரித்து சேகரம் செய்ய தேவையான விரிவான செயல் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக மாநகராட்சி சுகாதார அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பைகளை குடியிருப்பு வாசிகள் தரம் பிரித்து தங்கள் சொந்த பொறுப்பில் அவர்களுடைய வளாகத்திலேயே மக்கும் குப்பைகளை பையோகேஸ் அல்லது உரம் தயாரிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மேலும், மறுசுழற்ச்சிக்கு ஏதுவான பிற கழிவுகளை தனி நபருக்கு விற்பனை செய்யவோ அல்லது மாநகராட்சியிலும் ஒப்படைக்கலாம்.

மேலும், இதர குடியிருப்புகளில் மாநகராட்சி மூலம் 2,087 குப்பை சேகரிக்கும் தள்ளு வண்டிகள் மூலம் தரம் பிரித்த குப்பைகளை சேகரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகள் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சி துப்புரவு பணியாளரிடம் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், மாநகராட்சிப் பொறியாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...