கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,400 போதை மாத்திரைகள் மற்றும் 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை:
குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவைபுதூர் பகுதியில் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து 1,400 போதை மாத்திரைகள் மற்றும் 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சல்மான் கான் (26) மற்றும் பாத்திமா சஹானா (20) என அடையாளம் காணப்பட்டனர். இருவரும் கணவன், மனைவி என்பதும், கோவைபுதூர் தொற்றாயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவைபுதூர் பகுதியில் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் இருந்து 1,400 போதை மாத்திரைகள் மற்றும் 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சல்மான் கான் (26) மற்றும் பாத்திமா சஹானா (20) என அடையாளம் காணப்பட்டனர். இருவரும் கணவன், மனைவி என்பதும், கோவைபுதூர் தொற்றாயன் கோவில் வீதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.