ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி - IIT பாலக்காடு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியும் IIT பாலக்காடும் இடையே கல்வி மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகஸ்ட் 19 அன்று கையெழுத்தானது. கூட்டு ஆராய்ச்சி, அறிவுப் பரிமாற்றம், நிதியுதவி முயற்சிகள் இதன் முக்கிய நோக்கங்களாகும்.


Coimbatore: கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் அங்கமான ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி (SRIT) மற்றும் பாலக்காடு இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Palakkad) இடையே கல்வி மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஆகஸ்ட் 19 அன்று காலை 10 மணியளவில் IIT பாலக்காடு நிலா வளாகத்தில் சிறப்பாகக் கையெழுத்தானது.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் Dr. சுந்தர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு கல்வி நிறுவனங்களுக்கும் இடையிலான தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கல்விப் புதுமைகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுறவை உருவாக்குகிறது.

IIT பாலக்காடு தரப்பில் தொழிற்துறை மற்றும் நிதி ஆராய்ச்சித் தலைவர் Dr. அரவிந்த் அஜய், நிர்வாகப் புல முதன்மையர் Dr. பிபுரஞ்சன் சாரங்கி மற்றும் மின் பொறியியல் துறை இணைப் பேராசிரியர் Dr. சுக்கோமல் டே ஆகியோர் பங்கேற்றனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி தரப்பில் முதல்வர் Dr. ஜெ. டேவிட் ரத்னராஜ், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களாக கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கல்வி புதுமைச் சிந்தனை மற்றும் அறிவுப் பரிமாற்றம், ஆராய்ச்சி நிதியுதவி ஆகியவை அடங்கும். அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் இரு நிறுவனங்களும் இணைந்து கூட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதுடன், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்ள வழிவகை செய்யும்.

மேலும் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஆராய்ச்சி திட்டங்களுக்குத் தேவையான நிதியுதவிகளை இணைந்து பெறுவதற்கான வாய்ப்புகளும் உருவாக்கப்படும். இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் எதிர்காலத் தொழில்நுட்ப ஆராய்ச்சி விரிவடைவதுடன், மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகளும், புதிய வேலைவாய்ப்புகளும் அதிகளவில் உருவாகும் என இரு தரப்பினரும் எதிர்பார்ப்பு தெரிவித்தனர்.

இந்த கூட்டுறவு கோவை மாவட்டத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

Newsletter

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வியட்நாம் ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகத்துடன் கல்வி ஒப்பந்தம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் வியட்நாம் ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகமும் சர்வதேச கல்வி ஒத்துழைப்பு,...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி - IIT பாலக்காடு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியும் IIT பாலக்காடும் இடையே கல்வி மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான புரிந்துண...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணையில் தொடர் நீர்வரத்து காரணமாக நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. திரும...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிக...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...