கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். பிறப்பு இறப்பு சான்றிதழ், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட குறைகளை மக்கள் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS தெரிவித்தார்.
Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (18.08.2026) செவ்வாய்க்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாகத் தெரிவித்து தீர்வு காணலாம்.
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்தில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் பல்வேறு குறைகளை முன்வைக்கலாம் என மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS தெரிவித்துள்ளார்.
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் திருத்தம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளிக்கலாம்.
வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நடைபெறும் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்கள் பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். கோரிக்கை மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவர் உறுதியளித்தார்.
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்தில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்கள் பல்வேறு குறைகளை முன்வைக்கலாம் என மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS தெரிவித்துள்ளார்.
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் திருத்தம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளிக்கலாம்.
வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நடைபெறும் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்கள் பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். கோரிக்கை மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவர் உறுதியளித்தார்.