தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொடர்ந்து அவதூறாகப் பேசிவருவதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
கோவை: தமிழ் கடவுள் முருகப் பெருமானையும், அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்களையும் அவதூறாகவும், கொச்சையாகவும் பேசி வருவதாக, தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மைக்கேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பேரறிவாளன், த.வெ.க நிர்வாகி மைக்கேல் தொடர்ந்து தமிழ் கடவுள் முருகப் பெருமானையும், பிற அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் குடும்பப் பெண்களையும் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி வருவதாக குற்றம்சாட்டினார்.
திரைப்பட நடிகைகள் குறித்து தவறாகப் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், பிற பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதாகக் கூறப்படும் த.வெ.க நிர்வாகி மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி ‘சிங்கப் பெண்கள்’ படையை தொடங்கியதாக கூறும் த.வெ.க, தங்களது கட்சி நிர்வாகி பெண்கள் குறித்து அவதூறாகப் கூறப்படும் புகார் குறித்து கட்சித் தலைமை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கோவையை சேர்ந்த மைக்கேல் திட்டமிட்டு மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுகிறாரா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், பொது அமைதிக்கும் பெண்களின் கண்ணியத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் மைக்கேல் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தினர்.
புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பேரறிவாளன், த.வெ.க நிர்வாகி மைக்கேல் தொடர்ந்து தமிழ் கடவுள் முருகப் பெருமானையும், பிற அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் குடும்பப் பெண்களையும் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி வருவதாக குற்றம்சாட்டினார்.
திரைப்பட நடிகைகள் குறித்து தவறாகப் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், பிற பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதாகக் கூறப்படும் த.வெ.க நிர்வாகி மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி ‘சிங்கப் பெண்கள்’ படையை தொடங்கியதாக கூறும் த.வெ.க, தங்களது கட்சி நிர்வாகி பெண்கள் குறித்து அவதூறாகப் கூறப்படும் புகார் குறித்து கட்சித் தலைமை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கோவையை சேர்ந்த மைக்கேல் திட்டமிட்டு மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுகிறாரா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், பொது அமைதிக்கும் பெண்களின் கண்ணியத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் மைக்கேல் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தினர்.