தமிழகத்தில் 14 புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி கோரி மத்திய அமைச்சரிடம் மாநில அமைச்சர் மனு

தமிழக அரசு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதுதில்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி-யிடம் தமிழ்நாட்டில் 14 புதிய பேருந்து நிலையங்கள் அமைத்திட ரூ.736 கோடியே 64 லட்சம் வழங்க வேண்டி கோரிக்கை மனுவினை அளித்தார்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு சாலைப் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகின்றது. தொழில் வளர்ச்சி காரணமாக நகர்மயமாகுவதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இதனால், கிராமப்புறத்தில் இருந்து நகரங்களில் குடியேறுவதும் மக்கள் தொகை பெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது இன்றியமையாததாகும்.

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 18 சிறப்பு நிலை நகராட்சிகள், 28 தேர்வுநிலை நகராட்சிகள், 34 முதல்நிலை நகராட்சிகள் மற்றும் 44 இரண்டாம் நிலை நகராட்சிகள் என மொத்தம் 124 நகராட்சிகள் உள்ளன. நகரமயமாகுதல் காரணமாக ஒவ்வொரு நகரத்திலும் குறைந்தபட்சம் ஒரு பேருந்து நிலையமாவது இருப்பது அவசியமாகும். மொத்தமுள்ள 124 நகராட்சிகளில் 112 நகராட்சிகளில் பேருந்து நிலைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலம், தமிழ்நாட்டில் கோவை மாநகராட்சியில் ரூ.202.80 கோடி உள்ளிட்டு திருச்சி, மதுரை, வேலூர், ஈரோடு, திருநெல்வேலி, தஞ்சாவூர் என மொத்தம் 7 மாநகராட்சிகளில் ரூ.545.04 கோடி மதிப்பீட்டிலும் மயிலாடுதுறை, திண்டிவனம், கரூர் உள்ளிட்டு 7 நகராட்சிகளில் 191.60 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க கருத்துரு தயார் செய்யப்பட்டுள்ளது. 

ஆக மொத்தம் 14 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் ஏற்படுத்திட ரூ.736 கோடியே 64 லட்சம் மானியமாக வழங்கிட வேண்டி கோரிக்கை மனுவினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி-யிடம் அளித்தார்.

இச்சந்திப்பின்போது, நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர் பி.வேணுகோபால், நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி.பிரகாஷ், புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுரை ஆணையர் என்.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...