இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், காயமடைந்தவர் போதையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் பலத்த ரத்தக் காயங்களுடன் காணப்பட்ட நபர், தன்னை சிலர் தாக்கியதாக போலீசாரிடம் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பேசிய நபர், அவர் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்றும் கே.ஜி. மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள தெருப்பகுதியில் தங்கி கூலி மற்றும் சமையல் வேலை செய்து வந்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று இரவு பணி முடிந்து கோவை கே.ஜி. திரையரங்கம் முன்பு சாலையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிலர் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அவரை ரயில்வே தண்டவாளம் பகுதி வரை துரத்திச் சென்று அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், போலீசார் அவரை சமாதானப்படுத்தி அமர வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலையிலும் சிலர் தன்னைத் தாக்க வந்ததாகவும், அப்போது ஏற்பட்ட தாக்குதலில் தனது கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததாகவும் அருண்குமார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் அதிகாரியிடம் தனது கையில் ஏற்பட்ட காயங்களை காண்பித்த அருண்குமார், நடந்த சம்பவம் குறித்து கண்ணீருடன் முறையிட்டார்.

இதனிடையே, காயமடைந்த அருண்குமார் போதையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அருண்குமாரைத் தாக்கியதாகக் கூறப்படும் நபர்கள் யார், அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...