கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், துடியலூர் பகுதியைச் சேர்ந்த யசோதா (24) மற்றும் ஊட்டியைச் சேர்ந்த கவிதா (43) ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ரயில் எதிர்பாராதவிதமாக இருவர் மீதும் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட யசோதா மற்றும் கவிதா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில்வே தண்டவாளம் போன்ற அதிக ஆபத்தான பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும்போது, ரயில் வருவதை தொலைவில் இருந்தே எச்சரிக்கும் வகையில் சிவப்புக் கொடி உள்ளிட்ட எச்சரிக்கை உபகரணங்களும், பணியாளர்களை அடையாளம் காணும் வகையில் பாதுகாப்பு சட்டைகளும் வழங்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், துடியலூர் பகுதியைச் சேர்ந்த யசோதா (24) மற்றும் ஊட்டியைச் சேர்ந்த கவிதா (43) ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ரயில் எதிர்பாராதவிதமாக இருவர் மீதும் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட யசோதா மற்றும் கவிதா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில்வே தண்டவாளம் போன்ற அதிக ஆபத்தான பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும்போது, ரயில் வருவதை தொலைவில் இருந்தே எச்சரிக்கும் வகையில் சிவப்புக் கொடி உள்ளிட்ட எச்சரிக்கை உபகரணங்களும், பணியாளர்களை அடையாளம் காணும் வகையில் பாதுகாப்பு சட்டைகளும் வழங்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.