கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவுகளில் 634 மாணவிகள் பட்டம் பெற்றனர். KPMG இந்தியா நிறுவனத்தின் தேசியத் தலைவர் நாராயணன் ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Coimbatore: ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவுகளில் 634 மாணவிகள் பட்டம் பெற்றனர். பல்கலைக்கழக அளவில் 4 தங்கப் பதக்கங்கள் உட்பட 12 சிறப்பிடங்களைக் கல்லூரி மாணவிகள் பெற்றுள்ளனர்.
KPMG இந்தியா நிறுவனத்தின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுச் சேவைப் பிரிவின் தேசியத் தலைவர் நாராயணன் ராமசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். மாணவிகள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய திறன்களைத் தொடர்ந்து கற்றுக்கொண்டு, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தன்னம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் நேர்மை ஆகியவற்றை வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் சிறந்த சாதனைகளை படைக்க வேண்டும் என்று மாணவிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
SNR சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் Dr. சுந்தர் ராமகிருஷ்ணன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசினார். கல்வி என்பது நமக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் பயன் தருவது என்று அவர் குறிப்பிட்டார். தொடர் உழைப்பின் பலனாகப் பட்டம் பெறும் மாணவிகள், தங்களுடைய திறமைகளைத் தனக்கும் தான் வாழும் சமூகத்திற்கும் உதவக்கூடியதாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மாணவிகளின் வாழ்க்கையில் வெற்றிகளையும் பலவித முன்னேற்றங்களையும் பெற அவர் வாழ்த்து தெரிவித்தார்.
முதல்வர் Dr. கி.சித்ரா கல்லூரி மற்றும் மாணவிகளின் சாதனைகளையும் பல்கலைக்கழக அளவில் அவர்கள் பெற்ற சிறப்புகளையும் குறிப்பிட்டுப் பேசினார். பட்டம் பெற்ற அனைத்து மாணவிகளையும் அவர் பாராட்டிப் பேசினார்.
நிகழ்ச்சியில் SNR சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலரும் கல்லூரியின் செயலருமான சி.வி.ராம்குமார் மற்றும் SNR சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி டி.மகேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
KPMG இந்தியா நிறுவனத்தின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுச் சேவைப் பிரிவின் தேசியத் தலைவர் நாராயணன் ராமசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். மாணவிகள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய திறன்களைத் தொடர்ந்து கற்றுக்கொண்டு, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தன்னம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் நேர்மை ஆகியவற்றை வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் சிறந்த சாதனைகளை படைக்க வேண்டும் என்று மாணவிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
SNR சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் Dr. சுந்தர் ராமகிருஷ்ணன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசினார். கல்வி என்பது நமக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் பயன் தருவது என்று அவர் குறிப்பிட்டார். தொடர் உழைப்பின் பலனாகப் பட்டம் பெறும் மாணவிகள், தங்களுடைய திறமைகளைத் தனக்கும் தான் வாழும் சமூகத்திற்கும் உதவக்கூடியதாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மாணவிகளின் வாழ்க்கையில் வெற்றிகளையும் பலவித முன்னேற்றங்களையும் பெற அவர் வாழ்த்து தெரிவித்தார்.
முதல்வர் Dr. கி.சித்ரா கல்லூரி மற்றும் மாணவிகளின் சாதனைகளையும் பல்கலைக்கழக அளவில் அவர்கள் பெற்ற சிறப்புகளையும் குறிப்பிட்டுப் பேசினார். பட்டம் பெற்ற அனைத்து மாணவிகளையும் அவர் பாராட்டிப் பேசினார்.
நிகழ்ச்சியில் SNR சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலரும் கல்லூரியின் செயலருமான சி.வி.ராம்குமார் மற்றும் SNR சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி டி.மகேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.