கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை: ஏழு மாத கர்ப்பிணியான மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை துடியலூர் சந்தை வீதியைச் சேர்ந்த ரவிக்குமார், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். அவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட வளர்மதிக்கு, திருமணத்திற்குப் பிறகே ரவிக்குமார் ஏற்கனவே மற்றொரு பெண்ணை திருமணம் செய்து குழந்தையும் பெற்றிருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், தனது முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றியதாகக் கூறி வளர்மதி கணவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, தன்னுடன் வாழ விரும்பினால் வாழலாம், இல்லையெனில் செத்து விடு என்று ரவிக்குமார் பேசியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
இதனால் மனமுடைந்த ஏழு மாத கர்ப்பிணியான வளர்மதி, கடந்த 2010-ஆம் ஆண்டு சாணிப்பவுடரை கரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, ரவிக்குமார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜ், குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரவிக்குமாருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் அர்ச்சனா ஆஜராகி வாதாடினார்.
கோவை துடியலூர் சந்தை வீதியைச் சேர்ந்த ரவிக்குமார், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். அவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட வளர்மதிக்கு, திருமணத்திற்குப் பிறகே ரவிக்குமார் ஏற்கனவே மற்றொரு பெண்ணை திருமணம் செய்து குழந்தையும் பெற்றிருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், தனது முதல் திருமணத்தை மறைத்து ஏமாற்றியதாகக் கூறி வளர்மதி கணவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது, தன்னுடன் வாழ விரும்பினால் வாழலாம், இல்லையெனில் செத்து விடு என்று ரவிக்குமார் பேசியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
இதனால் மனமுடைந்த ஏழு மாத கர்ப்பிணியான வளர்மதி, கடந்த 2010-ஆம் ஆண்டு சாணிப்பவுடரை கரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, ரவிக்குமார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜ், குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரவிக்குமாருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் அர்ச்சனா ஆஜராகி வாதாடினார்.