கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதி நிலவரப்படி மூன்று அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Coimbatore: கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதி நிலவரப்படி ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் ஆகஸ்ட் 3ஆம் தேதி நிலவரப்படி 54.7 அடியாக நீர்மட்டம் உள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 195 கன அடி நீர்வரத்து பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 250 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆகஸ்ட் 3ஆம் தேதி நிலவரப்படி 29 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 1733 கன அடி நீர்வரத்து பதிவாகியுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 60 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
வால்பாறையை அடுத்த சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் ஆகஸ்ட் 3ஆம் தேதி நிலவரப்படி 92.24 அடியாக நீர்மட்டம் உள்ளது. இந்த அணைக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 3507 கன அடி நீர்வரத்து பதிவாகியுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1153 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தொடர்ந்து சீராக பெய்து வருவதால், மாவட்ட அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவது விவசாயிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் ஆகஸ்ட் 3ஆம் தேதி நிலவரப்படி 54.7 அடியாக நீர்மட்டம் உள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 195 கன அடி நீர்வரத்து பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் அணையில் இருந்து வினாடிக்கு 250 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆகஸ்ட் 3ஆம் தேதி நிலவரப்படி 29 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 1733 கன அடி நீர்வரத்து பதிவாகியுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 60 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
வால்பாறையை அடுத்த சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் ஆகஸ்ட் 3ஆம் தேதி நிலவரப்படி 92.24 அடியாக நீர்மட்டம் உள்ளது. இந்த அணைக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 3507 கன அடி நீர்வரத்து பதிவாகியுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1153 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தொடர்ந்து சீராக பெய்து வருவதால், மாவட்ட அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவது விவசாயிகளுக்கு நிம்மதியை அளித்துள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.