கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் பணியை துவக்கியும், கிழக்கு மண்டலத்தில் ₹2.36 கோடியில் அமைக்கப்பட்ட 4.26 ஏக்கர் பரப்பளவு மூங்கில் பூங்காவை திறந்து வைத்தார். மொத்தம் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான இந்த வளர்ச்சி திட்டங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ளன.


Coimbatore: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இன்று (01.08.2026) அடிக்கல் நாட்டியும், திறந்து வைத்தும், பார்வையிட்டார்.



மத்திய மண்டலத்தின் வார்டு எண் 32-க்குட்பட்ட சங்கனூர், தண்டல்ராமன் வீதி பகுதியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ₹29.50 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டுதல் பணியை அமைச்சர் துவக்கி வைத்தார். பணிகளை விரைவாக நிறைவு செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



அதனைத் தொடர்ந்து, கிழக்கு மண்டலம் வார்டு எண் 55-க்குட்பட்ட சிங்காநல்லூர், SIHS காலனி, காவேரி நகர் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ₹2.36 கோடி மதிப்பீட்டில் சுமார் 4.26 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மூங்கில் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.



மாவட்ட ஆட்சித்தலைவர் Pawan Kumar Giriyappanar IAS, மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.S.ஸ்ரீகிரி பிரசாத் ஆகியோர் நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

திறக்கப்பட்ட மூங்கில் பூங்காவில் நடைபாதை, யோகா பயிற்சி வசதி, திறந்தவெளி அரங்கம், குடிநீர் விநியோகப் பகுதி, வெளிப்புற உடற்பயிற்சி வசதிகள், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சர் வே.சம்பத்குமார் பூங்காவை பார்வையிட்டு மரக்கன்று நடவு செய்தார்.

கிழக்கு மண்டல குழுத்தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், துணை மாநகரப் பொறியாளர் எழில், உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, செயற்பொறியாளர் யோகசித்ரா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணக்குமார், இளங்கோவன், மாமன்ற உறுப்பினர்கள் பார்த்திபன், தர்மராஜ், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர்கள் குமரேசன், ராஜராஜேஸ்வரன், சுகாதார ஆய்வாளர்கள் ஜெகநாதன், நவீன்குமார், ஜெரால்டு சத்ய புனிதன் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

இந்த வளர்ச்சி திட்டங்கள் மூலம் பொதுமக்கள் பயன்பெறுமாறு அமைச்சர் வே.சம்பத்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...