கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்களால் தாக்குதல் நடத்தியது. முன்விரோதம் காரணமாக நடந்த இந்த வன்முறை சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை நகரில் கல்லூரி மாணவர் மீது பீர் பாட்டில்களால் தாக்குதல் நடத்திய வழக்கில், போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாக நடந்த இந்த கொடூர வன்முறை சம்பவத்தில், இரண்டு இளைஞர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த யாசிர் அகமது (19), சுல்தான் மொய்தீனின் மகன். இவர் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் B.Com மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். பீளமேடு வெற்றிலைக்காரன் வீதியில் உள்ள ஒரு அறையில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார்.

சமீபத்தில் மொபைல் போன் மற்றும் நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக, சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ரொனால்டோ எடி மகிஷி என்பவர் மீது யாசிர் அகமது புகார் அளிக்க உதவி செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மகிஷியின் ஆதரவாளரான மருதுபாண்டி என்பவர், யாசிர் அகமதை போனில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார்.

இதை அடுத்து யாசிர் அகமதுவும், அவரது நண்பரான தேவகோட்டை அகதிகள் முகாமைச் சேர்ந்த ரோஷன் சஞ்சயும் (22) கல்லூரி வளாகத்தில் மருதுபாண்டியை தட்டிக்கேட்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.


பீர் பாட்டில்களால் கொடூர தாக்குதல்




இந்த முன்விரோதம் காரணமாக, நேற்று முன்தினம் மாலை, மருதுபாண்டி தலைமையில் சஞ்சய், அப்துல் கலாம், பேபி கரன், தீனதயாளன், செல்வம், இம்ரான் முகமது (19), ரதீஷ் (24), கோகுல் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என 10 பேர் கொண்ட கும்பல் பீளமேட்டில் உள்ள யாசிர் அகமதுவின் அறைக்குள் கதவை உடைத்துக் கொண்டு புகுந்தது.

அங்கு இருந்த ரோஷன் சஞ்சயை கைகளாலும் கால்களாலும் மிதித்து, கத்தியின் கைப்பிடியால் கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் யாசிர் அகமதை பிடித்து, அவர்கள் கொண்டு வந்திருந்த பீர் பாட்டில்களால் தலையில் சரமாரியாக உடைத்து தாக்கியதில், யாசிர் அகமதுவின் தலையில் பலத்த வெட்டுக் காயங்களும், ரோஷன் சஞ்சய்க்கு காயங்கள் ஏற்பட்டது.


மருத்துவமனையில் சிகிச்சை




ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து யாசிர் அகமது அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட குனியமுத்தூரைச் சேர்ந்த இம்ரான் முகமது (19), பரமக்குடியைச் சேர்ந்த ரதீஷ் (24) மற்றும் சஞ்சய் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தப்பியோடிய மருதுபாண்டி உட்பட ஏழு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...