கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.5.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவை: கோவை நீதிமன்றம் அருகிலுள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழக அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, முன்னாள் படைவீரர்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி சார்பில் 2025-ஆம் ஆண்டுக்கான கொடிநாள் நிதியாக வசூலிக்கப்பட்ட ரூ.61.90 லட்சத்திற்கான காசோலையை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா அமைச்சரிடம் வழங்கினார்.

தொடர்ந்து, 14 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ.5.60 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
ஆய்வின்போது, முன்னாள் படைவீரர்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி சார்பில் 2025-ஆம் ஆண்டுக்கான கொடிநாள் நிதியாக வசூலிக்கப்பட்ட ரூ.61.90 லட்சத்திற்கான காசோலையை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா அமைச்சரிடம் வழங்கினார்.
தொடர்ந்து, 14 முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ.5.60 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.