மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாவை வனத்துறை தற்காலிகமாக மூடியுள்ளது.
கோவை: மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருதிகோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (ஜூலை 29) தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சிறுவாணி மலைப்பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக, கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்து, அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (29.07.2026) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. நீர்வரத்து சீராகி இயல்பு நிலை திரும்பிய பின்னரே மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று
போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த திடீர் அறிவிப்பால், இன்று கோவை குற்றாலத்திற்கு செல்லத் திட்டமிட்டிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சிறுவாணி மலைப்பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக, கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீரின் அளவு கணிசமாக அதிகரித்து, அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (29.07.2026) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. நீர்வரத்து சீராகி இயல்பு நிலை திரும்பிய பின்னரே மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று
போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த திடீர் அறிவிப்பால், இன்று கோவை குற்றாலத்திற்கு செல்லத் திட்டமிட்டிருந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.