கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்சாட்டிய தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு, ஜூலை 31 முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலவரையற்ற கறிக்கோழி விற்பனை நிறுத்தம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
Coimbatore: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனையை காலவரையற்ற முறையில் நிறுத்துவதாக தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் தீவனக் கட்டுப்பாடு தொடர்பான நடைமுறைகளை முறையாக பின்பற்றாததால், சில்லரை விற்பனையாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விற்பனையாளர்கள் கூறுகையில், கறிக்கோழிகளை விற்பனை செய்வதற்கு சுமார் 12 மணி நேரத்திற்கு முன்பாக தீவனக் கட்டுப்பாடு நடைமுறையை கடைபிடிக்க வேண்டிய நிலையில், அது முறையாக அமல்படுத்தப்படாததால் கோழிகளின் எடையில் மோசடி ஏற்பட்டு, விற்பனையாளர்களுக்கு இழப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர். இந்த எடை மோசடியைத் தடுக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதாகவும் கூறினர்.
மேலும், கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் உடனடியாக தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றும், இதுதொடர்பாக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்த மற்றும் சில்லரை கறிக்கோழி விற்பனையாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனையை நிறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
விற்பனையாளர்கள் கூறுகையில், கறிக்கோழிகளை விற்பனை செய்வதற்கு சுமார் 12 மணி நேரத்திற்கு முன்பாக தீவனக் கட்டுப்பாடு நடைமுறையை கடைபிடிக்க வேண்டிய நிலையில், அது முறையாக அமல்படுத்தப்படாததால் கோழிகளின் எடையில் மோசடி ஏற்பட்டு, விற்பனையாளர்களுக்கு இழப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர். இந்த எடை மோசடியைத் தடுக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதாகவும் கூறினர்.
மேலும், கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் உடனடியாக தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றும், இதுதொடர்பாக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்த மற்றும் சில்லரை கறிக்கோழி விற்பனையாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனையை நிறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.