கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தெரிவித்தார்.
Coimbatore: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (28.07.2026) செவ்வாய்க்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமை தாங்குவார் என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை நேரடியாக மேயரிடம் அளிக்கலாம். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை தொடர்பான பிரச்சினைகள் குறித்து முறையிடலாம்.
மேலும், தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி விவகாரங்கள், புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல், பெயர் திருத்தம் போன்ற நிர்வாக சேவைகள் தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைக்கலாம். மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த புகார்களையும் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை நேரடியாக மேயரிடம் அளிக்கலாம். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை தொடர்பான பிரச்சினைகள் குறித்து முறையிடலாம்.
மேலும், தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி விவகாரங்கள், புதிய குடிநீர் இணைப்பு வழங்குதல், பெயர் திருத்தம் போன்ற நிர்வாக சேவைகள் தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைக்கலாம். மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த புகார்களையும் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.