கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு குறித்த இருநாள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், டோக்ளா மிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தயார்நிலை உணவுப் பொருட்கள் தயாரிக்கும் முறைகள் கற்றுக் கொடுக்கப்படும்.


Coimbatore: கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் சார்பில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் குறித்த இருநாள் பயிற்சி முகாம் ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படும்.

இந்த பயிற்சி முகாமில் பங்கேற்பாளர்களுக்கு தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், டோக்ளா மிக்ஸ், பிசிபெலா பாத் மிக்ஸ், கீர் மிக்ஸ், குலாப் ஜாமூன் மிக்ஸ், ஐஸ் கிரீம் மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ் மற்றும் சூப் மிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தயார்நிலை உணவுப் பொருட்களை தயாரிக்கும் நவீன முறைகள் குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் ரூ.1,770 (ரூ.1,500 + 18% GST) கட்டணத்தை பயிற்சியின் முதல் நாளன்று செலுத்த வேண்டும். இந்த பயிற்சி முகாமானது வீட்டுத் தொழில் தொடங்க விரும்புவோர், சுயதொழில் ஆர்வலர்கள் மற்றும் உணவுத் தொழில் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

மேலும் விவரங்கள் மற்றும் பதிவுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641003 என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 94885-18268, 0422-6611340 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...