கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு குறித்த இருநாள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், டோக்ளா மிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தயார்நிலை உணவுப் பொருட்கள் தயாரிக்கும் முறைகள் கற்றுக் கொடுக்கப்படும்.


Coimbatore: கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் சார்பில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் குறித்த இருநாள் பயிற்சி முகாம் ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படும்.

இந்த பயிற்சி முகாமில் பங்கேற்பாளர்களுக்கு தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், டோக்ளா மிக்ஸ், பிசிபெலா பாத் மிக்ஸ், கீர் மிக்ஸ், குலாப் ஜாமூன் மிக்ஸ், ஐஸ் கிரீம் மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ் மற்றும் சூப் மிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தயார்நிலை உணவுப் பொருட்களை தயாரிக்கும் நவீன முறைகள் குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் ரூ.1,770 (ரூ.1,500 + 18% GST) கட்டணத்தை பயிற்சியின் முதல் நாளன்று செலுத்த வேண்டும். இந்த பயிற்சி முகாமானது வீட்டுத் தொழில் தொடங்க விரும்புவோர், சுயதொழில் ஆர்வலர்கள் மற்றும் உணவுத் தொழில் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

மேலும் விவரங்கள் மற்றும் பதிவுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641003 என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 94885-18268, 0422-6611340 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

Newsletter

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...