கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி முற்போக்கு அமைப்புகள் காவல் ஆணையர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தன.

கோவை: கோவை பீளமேடு காந்திமாநகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, அரசுக்குச் சொந்தமான பள்ளி மைதானங்கள் மற்றும் பொது இடங்களில் இதுபோன்ற பயிற்சிகளை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி சி.பி.ஐ. (எம்.எல்.) உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள், கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தன.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.ஐ. (எம்.எல்.) மாநிலக் குழு உறுப்பினர் பெரோஸ், கடந்த ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சிகள் நடத்தப்படுவதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றதாகக் கூறினார்.

அதன் விளைவாக, பொது இடங்களில் இதுபோன்ற பயிற்சிகளை நடத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டை அரசு எடுத்திருந்ததாகவும், தற்போது மீண்டும் அரசுப் பள்ளி மைதானங்களில் 'சாகா' பயிற்சிகள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டினார்.



மேலும், இதுபோன்ற பயிற்சிகள் மாணவர்களிடையே மத மற்றும் சமூகப் பிளவுகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், பள்ளி வளாகங்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான பொது இடங்கள் இதற்காக பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசு உடனடியாக தலையிட்டு, அரசுப் பள்ளி மைதானங்கள் மற்றும் பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சிகள் நடத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பெரோஸ் தெரிவித்தார்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...