ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக கூறப்படும் உதவி காவல் ஆய்வாளர் ஜான்சன், அந்த பணத்தை திருப்பி பெற்றுக்கொள்ளுமாறு தலைமை காவலர் மூலம் பேசிய ஆடியோ வெளியாகி வைரலான நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜான்சன், ரூ.5,000 லஞ்சம் வாங்கியதாக வெளியான ஆடியோ பதிவு தொடர்பான புகாரின் எதிரொலியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளத்தொடர்பு தொடர்பான புகாரின் பேரில் விசாரணைக்கு வந்த முகேஷ் என்பவரிடம், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான்சன் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர், அவர் பணம் பெற்றது காவல் நிலையத்தில் இருந்தவர்களுக்கு தெரிந்ததால், அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்காக, தலைமை காவலர் நாகராஜன் மூலம் முகேஷை தொடர்புகொண்டு, பெற்ற பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு பேசிய தொலைபேசி உரையாடலின் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில், பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு நாகராஜன் வலியுறுத்துவதும், தனக்கு பணம் தேவையில்லை, வழக்கில் இருந்து தன்னை விடுவித்தால் போதும் என்று முகேஷ் கூறுவதும் என இருவரும் மாறி மாறி பேசிக்கொள்ளும் ஆடியோ பதிவாகியுள்ளது.

இந்த ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார், உதவி ஆய்வாளர் ஜான்சன் மற்றும் தலைமை காவலர் நாகராஜன் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், தற்போது உதவி ஆய்வாளர் ஜான்சனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிரபுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பாக காவல்துறையின் துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...