பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் உயர்கல்வித்துறை உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் முதுகலைப் படிப்புகளில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

மாணவர்கள் கூறுகையில், இரண்டு ஆண்டுகளில் நிறைவடைய வேண்டிய முதுகலைப் படிப்புகளுக்கு இதுவரை முறையாக வகுப்புகள் நடத்தப்படவில்லை என்றும், இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட வேண்டிய தேர்வுகளில் இரண்டு பருவத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில், மூன்றாம் பருவத் தேர்வுக்கான கட்டணத்தை ஜூன் 25-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு பல்கலைக்கழகம் அறிவித்ததையடுத்து, மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பல்கலைக்கழக இணையதளம் மூலம் தேர்வுக் கட்டணத்தை செலுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூன்றாம் பருவத் தேர்வுக்கான கட்டணம், நான்காம் பருவத் தேர்வுக்கான கட்டணமாக இணையதளத்தில் பதிவாகியுள்ளதாகவும், இதையடுத்து மூன்றாம் பருவத் தேர்வுக்கான கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், வகுப்புகள் எப்போது தொடங்கப்படும், பாடப்புத்தகங்கள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்தும் பல்கலைக்கழகம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், இந்த ஆண்டுக்குள் மூன்றாம் மற்றும் நான்காம் பருவத் தேர்வுகள் நடைபெற்று படிப்பு நிறைவடையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் கல்வி தொடர்பான விவகாரங்களில் அலட்சியம் காட்டக் கூடாது என்றும், இந்த பிரச்சினையில் உயர்கல்வித்துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, அபராதத்தை ரத்து செய்து, தொலைதூரக் கல்வி மாணவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...