இடிகரை பேரூராட்சி மணியக்காரன்பாளையம் வார்டு 6-க்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் கடும் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் மனு அளித்தனர். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி தலைவர் உறுதியளித்தார்.
Coimbatore:
கோவை மாவட்டம் இடிகரை பேரூராட்சிக்குட்பட்ட மணியக்காரன்பாளையம், வார்டு எண் 6-ல் உள்ள மகாலட்சுமி கார்டன் பகுதி பொதுமக்கள், சாலை மற்றும் வடிகால் வசதி அமைத்துத் தரக் கோரி பேரூராட்சி தலைவர் என். ஜெனார்த்தனனிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், மகாலட்சுமி கார்டன் பகுதியில் முறையான சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாததால், குறிப்பாக மழைக்காலங்களில் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும், அடிப்படை வசதிகளை விரைவில் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக்கொண்ட பேரூராட்சி தலைவர், கோரிக்கையை பரிசீலித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் 6-வது வார்டு கவுன்சிலர் ச. மாரிமுத்து, திமுக நிர்வாகிகள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கோவை மாவட்டம் இடிகரை பேரூராட்சிக்குட்பட்ட மணியக்காரன்பாளையம், வார்டு எண் 6-ல் உள்ள மகாலட்சுமி கார்டன் பகுதி பொதுமக்கள், சாலை மற்றும் வடிகால் வசதி அமைத்துத் தரக் கோரி பேரூராட்சி தலைவர் என். ஜெனார்த்தனனிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், மகாலட்சுமி கார்டன் பகுதியில் முறையான சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாததால், குறிப்பாக மழைக்காலங்களில் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும், அடிப்படை வசதிகளை விரைவில் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக்கொண்ட பேரூராட்சி தலைவர், கோரிக்கையை பரிசீலித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் 6-வது வார்டு கவுன்சிலர் ச. மாரிமுத்து, திமுக நிர்வாகிகள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.