பேரூராட்சி தலைவரிடம் சாலை, வடிகால் வசதி கோரிக்கை மனு அளித்த இடிகரை மகாலட்சுமி கார்டன் மக்கள்

இடிகரை பேரூராட்சி மணியக்காரன்பாளையம் வார்டு 6-க்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் கடும் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் மனு அளித்தனர். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி தலைவர் உறுதியளித்தார்.


Coimbatore:

கோவை மாவட்டம் இடிகரை பேரூராட்சிக்குட்பட்ட மணியக்காரன்பாளையம், வார்டு எண் 6-ல் உள்ள மகாலட்சுமி கார்டன் பகுதி பொதுமக்கள், சாலை மற்றும் வடிகால் வசதி அமைத்துத் தரக் கோரி பேரூராட்சி தலைவர் என். ஜெனார்த்தனனிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், மகாலட்சுமி கார்டன் பகுதியில் முறையான சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாததால், குறிப்பாக மழைக்காலங்களில் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும், அடிப்படை வசதிகளை விரைவில் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



மனுவைப் பெற்றுக்கொண்ட பேரூராட்சி தலைவர், கோரிக்கையை பரிசீலித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் 6-வது வார்டு கவுன்சிலர் ச. மாரிமுத்து, திமுக நிர்வாகிகள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...