கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்டமும், 24 மாணவர்களுக்கு தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டன. வேந்தர் Dr கு. இராமசாமி விழாவிற்கு தலைமை வகித்தார். காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் Dr N. பஞ்சநதம் சிறப்புரை ஆற்றினார்.


Coimbatore: கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் பிரிவு மாணவர்களுக்கான 18-வது பட்டமளிப்பு விழா நேற்று (11.07.2026) நடைபெற்றது. இவ்விழாவில் மொத்தம் 2146 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.






கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் Dr கு. இராமசாமி விழாவிற்கு தலைமை வகித்தார். கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் Dr இராச. வசந்தகுமார், கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் க. முருகையா, துணைவேந்தர் Dr சு. இரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.






திண்டுக்கல், காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr N. பஞ்சநதம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழாவில் பேருரை நிகழ்த்தினார். மாணவர்களின் உயர்கல்வியும், ஆராய்ச்சியும், சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு பங்களிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.




பொதுநல சிந்தனையும், தியாக உணர்வும் உலகில் அன்பையும், அமைதியையும் நிலைக்கச் செய்ய வேண்டும். தனிமனித தேவைகள் குறைந்து, உணவு, கல்வி, மருத்துவம் முதலான அடிப்படை தேவைகள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதற்கு மாணவர்கள் உறுதியேற்க வேண்டும் என்று அவர் தனது உரையில் தெரிவித்தார்.




இந்த விழாவில், 18 ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்டமும், 24 மாணவர்களுக்கு தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டன. மொத்தம் 2146 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில், பதிவாளர் Dr பீ.வீ. பிரதீப், தேர்வாணையர் Dr ப. பழனிவேலு மற்றும் Dr வீ. இராகவி உள்ளிட்ட முதன்மையர்களும், துறைத்தலைவர்களும், பேராசிரியர்களும் கலந்துகொண்டனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...