கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/2 சவரன் தங்க நகையை கண்டுபிடித்து, மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் உரிய உரிமையாளரான அலிமாவிடம் நேரில் ஒப்படைத்தார். இந்த நேர்மையான செயல் பாராட்டுக்குரியது.


Coimbatore: கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளரின் நேர்மையான செயல் ஒன்று பலரின் பாராட்டுக்கு உரியதாக அமைந்துள்ளது. மத்திய மண்டலத்தின் கீழ் வரும் சிவானந்தா காலனி பகுதியில் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/2 சவரன் தங்க நகையை கண்டறிந்து, அதனை உரிய உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

கோவை மாநகராட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 100 வார்டுகளில் உள்ள வீடுகள் தோறும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள் தூய்மைப் பணியாளர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 10.07.2026 அன்று மத்திய மண்டலம் வார்டு எண் 68-க்கு உட்பட்ட சிவானந்தா காலனி, விசிகே லே அவுட் பகுதியில் வழக்கம்போல் குப்பை சேகரிப்பு பணி நடைபெற்று வந்தது. அப்போது, ஒப்பந்த தூய்மை பணியாளரான (SWMS) முருகன் (வயது 40), வீடுவீடாக சென்று குப்பை சேகரித்துக் கொண்டிருந்தார்.

குப்பை சேகரிப்பு பணியின் போது, முருகன் சேகரித்த குப்பையில் தவறுதலாக 1.1/2 சவரன் தங்க நகை கிடந்ததை கவனித்தார். உடனடியாக அவர் தனது மேலதிகாரிகளான சுகாதார மேற்பார்வையாளர் கார்த்திகேயன் மற்றும் மண்டல சுகாதார ஆய்வாளர் சரவணகுமார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த மாநகராட்சி அலுவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, தங்க நகையின் உரிமையாளர் அலிமா (வயது 54) என்ற பெண்மணி என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, தூய்மைப் பணியாளர் முருகன், மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/2 சவரன் தங்க நகையை உரிமையாளரான அலிமாவிடம் நேரில் ஒப்படைத்தார்.

தூய்மைப் பணியாளர் முருகனின் நேர்மையான செயல் பொதுமக்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றுள்ளது. ஒரு சாதாரண குப்பை சேகரிப்பு பணியாளர் காட்டிய நேர்மை, பிறருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

Newsletter

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...