கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களிடம் கலந்துரையாடி பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார்.
Coimbatore:
பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து, காவல்துறை மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் பேரூர் டி.எஸ்.பி தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கால்நடை ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்படி, காவலர்கள் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடந்து சென்று ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பேரூர் டி.எஸ்.பி குளத்துப்பாளையம் முதல் குபேரபுரி வரை நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ரோந்துப் பணியின் போது பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல சாலையோரத்தில் நின்றிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடிய அவர், பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்ந்து சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து காவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் அமைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் குபேரபுரி பகுதியில் வசித்து வரும் வடமாநில தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு சென்று, அவர்கள் பணிபுரியும் இடங்கள், தங்கும் வசதிகள், அடையாள ஆவணங்கள் மற்றும் அனுமதி விவரங்கள் குறித்து சோதனை நடத்தினார்.
காவல்துறையினரின் இந்த கால்நடை ரோந்துப் பணி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து, காவல்துறை மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் பேரூர் டி.எஸ்.பி தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கால்நடை ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்படி, காவலர்கள் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடந்து சென்று ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பேரூர் டி.எஸ்.பி குளத்துப்பாளையம் முதல் குபேரபுரி வரை நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ரோந்துப் பணியின் போது பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல சாலையோரத்தில் நின்றிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடிய அவர், பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகளை வழங்கினார்.
தொடர்ந்து சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து காவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் அமைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் குபேரபுரி பகுதியில் வசித்து வரும் வடமாநில தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு சென்று, அவர்கள் பணிபுரியும் இடங்கள், தங்கும் வசதிகள், அடையாள ஆவணங்கள் மற்றும் அனுமதி விவரங்கள் குறித்து சோதனை நடத்தினார்.
காவல்துறையினரின் இந்த கால்நடை ரோந்துப் பணி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.