அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்


கோவை மாவட்டத்தில் அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசு உத்தரவுக்கிணங்க கோவை மாவட்டம் முழுவதும் வழக்கம் போல் மே 15 (இன்று) முதல் அரசுப் பேருந்துகள் இயங்கும். பொதுமக்கள் யாரும் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் குறித்து அச்சப்பட தேவையில்லை.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலிருந்தும் அனைத்து அரசுப்பேருந்துகளையும் இயக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி காவல்துறையின் மூலம் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்பவர்கள் கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் அரசு பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்துறையின் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொள்வதுடன் தொடர்ந்து தனியார் பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநர்களையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமின்றி கனரக வாகன ஓட்டுநர் உரிமம் உள்ள நபர்கள் அரசு பேருந்துகளை இயக்க வரவேற்கப்படுகின்றனர், விருப்பம் உள்ளவர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்துடன் (அசல்) உக்கடம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் மற்றும் பயணிகள் பொதுமக்கள் புகார் தெரிவிக்க காவல்துறை தொலைபேசி எண்கள். 0422-2301737 மற்றும் 0422-2220077 தொடர்பு கொள்ளலாம்.

பயணிகள் பயணம் தொடர்பாக எவ்வித அச்சமின்றி பயணம் மேற்கொள்ளலாம். இதுமட்டுமின்றி பொதுமக்களின் நலன் கருதி கோவை ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...