போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் - பயணிகள் அவதி


போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கோவையில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே, இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தி தனியார் டுரீஸ்ட் பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலை இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவையில் இருந்து நீலகிரி மாவட்டத் குன்னூர், உதகை, கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவது வழக்கம். தற்போது, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலணி பேருந்து நிலையத்தில் இருந்து, நீலகிரிக்கு செல்லும் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

பெரும்பாலான அரசு பேருந்துகள் இயங்காததால், தனியார் டூரிஸ்ட் பஸ்கள் நீலகிரி மாவட்டத்திற்கு கோவையில் இருந்து இயக்கப்படுகின்றன. உதகை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பேருந்திற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், தனியார் பேருந்துகளில் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். அவசர தேவைகளுக்காக உதகை செல்ல வேண்டிய பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் காரணமாக கோவையில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தனியார் பேருந்துகள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி வாகன ஓட்டிகளைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், போதிய அளவு பேருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பெரும்பாலான கோவை நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பேருந்துகள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...