மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்களுக்கு தடையின்றி பாசன வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழவு அமராவதி பழைய ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.



விவசாயிகள் அளித்த மனுவில், காரத்தொழவு பகுதியில் அமைந்துள்ள ராஜவாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் பராமரிப்பின்றி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் அந்த வாய்க்காலை நம்பியுள்ள சுமார் 12 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நஞ்சை நிலங்கள் போதிய பாசன வசதி பெற முடியாமல் உள்ளதாகவும், இதன் காரணமாக விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், வாய்க்காலில் படிந்துள்ள மணல் மற்றும் புதர்களால் நீரோட்டம் தடைபட்டு, நிலங்களுக்கு தண்ணீர் சீராக சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் பல விவசாயிகள் முறையான சாகுபடி மேற்கொள்ள முடியாமல் பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு நீரோட்டத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரத்தொழவு அமராவதி பழைய ராஜவாய்க்கால் நீரை பயன்படுத்தும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...