கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழாவில் 351 மாணவர்களுக்கு பட்டங்கள்

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 351 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 14 மாணவர்கள் தங்க மற்றும் வெள்ளி பதக்கங்கள் பெற்றனர். UPS இந்தியா Dr. சுப்ரமணி ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


Coimbatore: கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியின் 16வது பட்டமளிப்பு விழா கற்பகம் நிகர் நிலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சேக்கிழார் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 351 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.






இதில் 7 பட்டதாரிகளுக்கு தங்க பதக்கமும், 7 பட்டதாரிகளுக்கு வெள்ளி பதக்கமும் வழங்கப்பட்டு அவர்களின் கல்வி சாதனைகள் கௌரவிக்கப்பட்டன. விழாவிற்கு கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் Dr. R. வசந்தகுமார் தலைமை தாங்கினார்.




விழாவின் சிறப்பு விருந்தினராக UPS இந்தியா டெக்னாலஜி சென்டர் நிறுவனத்தின் துணைத் தலைவர் Dr. சுப்ரமணி ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர் K. முருகையா மற்றும் கல்லூரி முதல்வர் Dr. P. மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




இவ்விழாவில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பட்டம் பெறும் மாணவ மாணவிகளும் அவர்களின் பெற்றோர்கள் பெருமளவில் கலந்துகொண்டு விழாவை மேலும் சிறப்பித்தனர். பட்டதாரிகள் தங்களின் கல்வி பயணத்தின் மைல்கல்லை கொண்டாடி மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...