காரமடை அருகே பேப்பர் கழிவுகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

கோவை காரமடை அருகே 23 டன் பேப்பர் கழிவுகளை ஏற்றி வந்த லாரி, முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தேவனாபுரம் பகுதியில், தனியார் காகித ஆலைக்கு பேப்பர் கழிவுகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



தேக்கம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் காகித ஆலைக்கு சென்னையில் இருந்து 23 டன் பேப்பர் கழிவுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. திருச்சியை சேர்ந்த துரை (40) என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.

நேற்று அதிகாலை தேவனாபுரம் அருகே வந்தபோது, அதிக பாரம் காரணமாக லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பில் மோதி குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியில் ஏற்றி வந்த பேப்பர் கழிவுகள் சாலையில் சிதறின. மேலும், லாரி ஓட்டுநர் துரை லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையில் இந்த விபத்து நிகழ்ந்த நிலையில், நள்ளிரவு நேரமாக இருந்ததால் போக்குவரத்து குறைவாக இருந்தது. இதனால் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அதிக பாரம் காரணமாக முன்பக்க டயர் வெடித்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

Newsletter

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...

கோவையில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்

கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம...

கோவை குனியமுத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் ரூ.47,000, செல்போன், செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரை நான்கு பேர் மிரட்டி வங்கி கணக்கிலிருந்து ரூ.47,000 பணம் பரிமாற்றம் செய்யச் சொன்னதோடு...