காரமடை அருகே பேப்பர் கழிவுகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

கோவை காரமடை அருகே 23 டன் பேப்பர் கழிவுகளை ஏற்றி வந்த லாரி, முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தேவனாபுரம் பகுதியில், தனியார் காகித ஆலைக்கு பேப்பர் கழிவுகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



தேக்கம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் காகித ஆலைக்கு சென்னையில் இருந்து 23 டன் பேப்பர் கழிவுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. திருச்சியை சேர்ந்த துரை (40) என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.

நேற்று அதிகாலை தேவனாபுரம் அருகே வந்தபோது, அதிக பாரம் காரணமாக லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பில் மோதி குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியில் ஏற்றி வந்த பேப்பர் கழிவுகள் சாலையில் சிதறின. மேலும், லாரி ஓட்டுநர் துரை லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையில் இந்த விபத்து நிகழ்ந்த நிலையில், நள்ளிரவு நேரமாக இருந்ததால் போக்குவரத்து குறைவாக இருந்தது. இதனால் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அதிக பாரம் காரணமாக முன்பக்க டயர் வெடித்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...