கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு விழிப்புணர்வு அறிவுரை வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில் போலீசார் இன்று அதிகாலை மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சமீபத்தில், தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று அதிகாலை கர்நாடக, கேரளா, ஆந்திரா பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கோவைக்கு வந்த ஆம்னி பேருந்துகளில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். பேருந்துகளில் பயணித்தவர்களின் உடைமைகள், பார்சல்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மோப்பநாய் உதவியுடன் பரிசோதிக்கப்பட்டன.



மேலும், நகரின் பல்வேறு பார்சல் அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வெளியூர்களில் இருந்து வந்த மற்றும் அனுப்பப்படவிருந்த பார்சல்கள் ஆய்வு செய்யப்பட்டன.

சோதனையின்போது ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடம், போதைப்பொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பார்சல்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது என்றும், இதுபோன்ற தகவல்கள் கிடைத்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

கோவைக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க இதுபோன்ற தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...