கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 25இல் உள்ள கணபதி பூங்காவில் புதிய மின்விளக்குகள், புனரமைக்கப்பட்ட கழிவறைகள் மற்றும் சுய உதவிக்குழு மூலம் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 25க்குட்பட்ட கணபதி மாநகர் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள், புனரமைக்கப்பட்டுள்ள கழிவறைகள் மற்றும் பூங்கா பராமரிப்புப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.


கமலி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் பூங்கா பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பூங்காவின் சுத்தம் மற்றும் பராமரிப்பு குறித்து அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.


இந்த ஆய்வில் மண்டல சுகாதார அலுவலர் முருகன், மாமன்ற உறுப்பினர் தவமணி பழனியப்பன், உதவி பொறியாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் நவீன்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கமலி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் பூங்கா பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பூங்காவின் சுத்தம் மற்றும் பராமரிப்பு குறித்து அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த ஆய்வில் மண்டல சுகாதார அலுவலர் முருகன், மாமன்ற உறுப்பினர் தவமணி பழனியப்பன், உதவி பொறியாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் நவீன்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.