கோவை நீதிமன்ற வளாகத்தில் நாய் துரத்தியதால் சுவரேறி குதித்த வடமாநில வாலிபர் பலி

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அடையாளம் தெரியாத வடமாநில வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சி.சி.டி.வி. காட்சிகளில், நாய் துரத்தியதால் நீதிமன்ற சுவரேறி உள்ளே குதித்த அவர், இருட்டில் தடுமாறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை கோபாலபுரத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத வடமாநில வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றிய ரேஸ்கோர்ஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீதிமன்றத்திற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை இருந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த ஊழியர்கள், நீதிமன்றத்தின் பின்பக்க வாசல் அருகே வாலிபர் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த மருத்துவக் குழுவினர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நீதிமன்ற வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

விசாரணையில், இன்று அதிகாலை அந்த வாலிபர் கோபாலபுரம் பகுதியில் நடந்து சென்றபோது நாய் ஒன்று அவரை துரத்தியது தெரியவந்தது. நாயிடமிருந்து தப்பிக்க அவர் நீதிமன்ற வளாகத்தின் பின்புற காம்பவுண்ட் சுவரில் ஏறி உள்ளே குதித்துள்ளார்.

அதன்பிறகும் பதற்றத்தில் வேகமாக ஓடியபோது, இருட்டில் எதிர்பாராத விதமாக கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த வாலிபரின் சட்டைப் பையில் ரூ.250 மட்டும் இருந்ததாகவும், அடையாள அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அவரது தோற்றத்தை வைத்து அவர் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர், கோவையில் எங்கு தங்கி வேலை பார்த்து வந்தார் என்பது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...