கோவை புறநகர் பகுதிகளான துடியலூர், வடமதுரை மற்றும் தடாகம் சாலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை திடீரென வீசிய சூறாவளிக் காற்று மற்றும் பலத்த மழையால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. கடைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன; மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன; மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
கோவை: கோவை புறநகர் பகுதிகளான துடியலூர், வடமதுரை மற்றும் தடாகம் சாலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை திடீரென வீசிய சூறாவளிக் காற்று மற்றும் பலத்த மழையால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. பல இடங்களில் கடைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்ததுடன், மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

கோடைக் காலம் முடிவடைந்து தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டு வரும் நிலையில், நேற்று பிற்பகலுக்குப் பிறகு கோவையின் பல பகுதிகளில் வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில், பலத்த சத்தத்துடன் சூறாவளிக் காற்று வீசத் தொடங்கியது.
துடியலூர், வடமதுரை மற்றும் தடாகம் சாலை பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்ததால், சாலையோர வணிக வளாகங்கள் மற்றும் தற்காலிக கடைகளின் தகர மற்றும் அஸ்பெஸ்டாஸ் மேற்கூரைகள் பெயர்ந்து காற்றில் பறந்தன. திடீரென பறந்து வந்த மேற்கூரைகளை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடி தஞ்சம் அடைந்தனர்.

மேலும், தடாகம் சாலை உள்ளிட்ட சில பகுதிகளில் பல மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. சில இடங்களில் மின் கம்பங்களும் சேதமடைந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு, பகுதிகள் இருளில் மூழ்கின.
இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக களமிறங்கி போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து மின் விநியோகம் மீண்டும் சீரமைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று மாலை ஏற்பட்ட திடீர் சூறாவளிக் காற்று மற்றும் மழையால் கோவையின் வடக்கு புறநகர் பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோடைக் காலம் முடிவடைந்து தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டு வரும் நிலையில், நேற்று பிற்பகலுக்குப் பிறகு கோவையின் பல பகுதிகளில் வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில், பலத்த சத்தத்துடன் சூறாவளிக் காற்று வீசத் தொடங்கியது.
துடியலூர், வடமதுரை மற்றும் தடாகம் சாலை பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்ததால், சாலையோர வணிக வளாகங்கள் மற்றும் தற்காலிக கடைகளின் தகர மற்றும் அஸ்பெஸ்டாஸ் மேற்கூரைகள் பெயர்ந்து காற்றில் பறந்தன. திடீரென பறந்து வந்த மேற்கூரைகளை கண்டு பொதுமக்கள் அச்சமடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடி தஞ்சம் அடைந்தனர்.
மேலும், தடாகம் சாலை உள்ளிட்ட சில பகுதிகளில் பல மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. சில இடங்களில் மின் கம்பங்களும் சேதமடைந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு, பகுதிகள் இருளில் மூழ்கின.
இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக களமிறங்கி போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து மின் விநியோகம் மீண்டும் சீரமைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று மாலை ஏற்பட்ட திடீர் சூறாவளிக் காற்று மற்றும் மழையால் கோவையின் வடக்கு புறநகர் பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.