சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர் இருப்பைக் கொண்டு ஆகஸ்ட் மாதம் வரை குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சியின் 21 வார்டுகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து தற்போது 8 அடியாக குறைந்துள்ளது. ஜனவரி மாதம் முதல் கோவை மாவட்டத்தில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

கடந்த மே மாத இறுதியில் 13.5 அடியாக இருந்த நீர்மட்டம் இப்போது 8 அடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையில், தற்போதைய நீர் இருப்பைக் கொண்டு ஆகஸ்ட் மாதம் வரை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.


நீர் விநியோகம் குறைப்பு




சிறுவாணி அணை, பில்லூர் 1, 2 மற்றும் 3 கூட்டுக் குடிநீர் திட்டங்கள், ஆழியார் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவை இணைந்து கோவை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் தமிழக எல்லைக்குள் இருந்தாலும், அணை கேரள வனப்பகுதியில் அமைந்துள்ளது.

49.5 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 44 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. நீர்மட்டம் குறைந்து வருவதால், சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவு 40 MLD (மில்லியன் லிட்டர் தினசரி) ஆக குறைக்கப்பட்டுள்ளது.


மேலும் குறையுமா நீர் விநியோகம்?




நீர்மட்டம் மேலும் குறைந்தால், குடிநீர் விநியோகத்தை 36 MLD ஆக குறைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். எனினும், உடனடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும். தென்மேற்கு பருவமழை தொடங்கினால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயரும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால், பருவமழை போதுமான அளவில் பெய்யாத நிலையில், தற்போதுள்ள நீர் இருப்பு இன்னும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பதால், பின்னர் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் நிலவுகிறது.


பில்லூர் அணையில் நீர்மட்டம் உயர்வு




இதற்கிடையில், கோவைக்கு குடிநீர் வழங்கும் மற்றொரு முக்கிய ஆதாரமான பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் 3-ஆம் தேதி 77 அடியாக இருந்த அணை நீர்மட்டம் தற்போது 85.2 அடியாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக பில்லூர் அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பில்லூர் அணையில் இருந்து கிடைக்கும் கூடுதல் நீர் விநியோகம் சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைவை ஓரளவு ஈடுகட்ட உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...