கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவலறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தண்ணீரை மாற்று வழியாக திருப்பி உடைந்த கரையை தற்காலிகமாக சீரமைத்தனர்.


கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட (பி.ஏ.பி.) வாய்க்காலில் இன்று கோவை செஞ்சேரிமலை அருகே திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் பெருமளவு தண்ணீர் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து வீணானது.



மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த பாசனத் திட்டம், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் பாசனத்திற்காக வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஏற்பட்ட இந்த உடைப்பு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



தகவலறிந்த விவசாயிகள் உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள் முதற்கட்டமாக மாற்று மதகுகள் வழியாக தண்ணீரை திருப்பிவிட்டனர். தொடர்ந்து, உடைந்த கரைப்பகுதியில் மண் கொட்டி தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். தற்போது பாறாங்கற்கள் மூலம் கரையை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த நவம்பர் மாதம் வாவிபாளையம் பகுதியில் ஏற்பட்ட இதேபோன்ற வாய்க்கால் உடைப்பு சம்பவத்தில் அதிகாரிகள் தாமதமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. ஆனால் இந்த முறை சில மணி நேரங்களிலேயே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததை விவசாயிகள் பாராட்டியுள்ளனர்.

இருப்பினும், பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பழமையான வாய்க்கால் பல இடங்களில் சிதிலமடைந்து காணப்படுவதால், எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க முழுமையான சீரமைப்பு மற்றும் கரை பலப்படுத்தும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...