கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச வழக்குகள், வங்கி கடன், மோட்டார் வாகன விபத்து, சொத்து தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு சமரசமாக முடிக்கப்படும். நீதிமன்ற கட்டணம் திருப்பி வழங்கப்படும் என சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி (சனிக்கிழமை) தேசிய அளவிலான லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.




கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், மதுக்கரை மற்றும் அன்னூர் ஆகிய நீதிமன்ற வளாகங்களில் இந்த மக்கள் நீதிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




இதில், ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன், கல்வி கடன் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் விசாரிக்கப்படும்.




மேலும், விவாகரத்து தவிர்த்து மற்ற குடும்ப பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள், நிலம், சொத்து, பாகப் பிரிவினை, வாடகை விவகாரங்கள், விற்பனை, வருமானம் மற்றும் சொத்து வரி பிரச்னைகள் போன்ற வழக்குகள் விசாரித்து சமரசமாக முடிக்கப்படும் என சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.




மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துகொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்துகொள்ளப்படும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.




நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் மற்றும் கடன் வசூல் வழக்குகளுக்கும் இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும். இதுபோன்ற வழக்குகளுக்கு தீர்வு எட்ட, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் டிசம்பர் 1ம் தேதி முதல் மாவட்ட நீதிபதிகள் தலைமையில் சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.




இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...