பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.


கோவை: வரும் 28ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அறுவைக் கூடங்களில் மட்டுமே மாடுகள் பலியிட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் இளைஞர் அணி மாநில பொதுச்செயலாளர் சூர்யா இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின்படி, பொது இடங்களில் கால்நடைகளை வதை செய்வது சட்டவிரோதம் என்பதால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. 

மேலும், சென்னை, கோவையின் பல்வேறு பகுதிகளில் பொது இடங்களிலும் விதிகளை மீறி மாடுகள் வெட்டப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இந்தாண்டு பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது, தற்காலிக செட்கள் அமைக்கக்கூடாது, அங்கீகரிக்கப்பட்ட அறுவைக் கூடங்களில் மட்டும் காளை மாடுகள் பலியிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., கோவை மாவட்ட ஆட்சியாளர், காவல் ஆணையாளர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் செல்வபுரம் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் வரும் 27ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து வழக்கு மீண்டும் 27ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...