புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதேசமயம், திருக்கோயில் நிர்வாகம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளையும் சங்கம் முன்வைத்துள்ளது.


கோவை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் நேர்மையான மற்றும் மக்கள் நல ஆட்சியை முன்னுதாரணமாக கொண்டு, புதிய முதலமைச்சர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்கள் சிறப்பான ஆட்சியை வழங்க வேண்டும் என கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களின் தெய்வங்களின் அருளும், மக்களின் ஆதரவும் புதிய அரசுக்கு கிடைக்க வேண்டும் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் புதிய அரசு சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும், முதல்வரின் ஆட்சி மக்கள் நல மறுமலர்ச்சியை உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் சங்கம் வெளியிட்டுள்ளது.

அதேவேளை, தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் செயல்படும் திருக்கோயில்கள் தொடர்பாக சில முக்கிய கோரிக்கைகளையும் சங்கம் முன்வைத்துள்ளது.

அதில், முன்னோர்கள் உருவாக்கிய திருக்கோயில்களுக்கு அவர்களது வாரிசுகள் மட்டுமே பரம்பரை அறங்காவலர்களாக நியமிக்கப்பட வேண்டும், பரம்பரை அறங்காவலர்களை சட்டப்பூர்வ நிர்வாகிகளாக அறநிலைத்துறை அங்கீகரிக்க வேண்டும், மாநில மற்றும் மண்டல அளவிலான திருக்கோயில் நிர்வாக குழுக்களில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், மேலும் இந்து சமய அறநிலைத்துறையின் உயர்மட்ட குழுக்களிலும் தமிழ்நாடு திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் சங்கத்திற்கு இடமளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...