கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரயில் நிலையம் முன்பு SFI, DYFI, AIYF, AISF உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Coimbatore: நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை (NTA) கலைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இடதுசாரி மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வின் போது ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.



அதன் தொடர்ச்சியாக இன்று கோவை ரயில் நிலையம் முன்பு SFI, DYFI, AISF, AIYF உள்ளிட்ட இடதுசாரி மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் DYFI மாவட்ட செயலாளர் தினேஷ் மற்றும் AIYF மாவட்ட தலைவர் அபிமன்யு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, “நீட் தேர்வை ரத்து செய்”, “தேசிய தேர்வு முகமையை கலைத்திடு”, “12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்திடு” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், நீட் தேர்வு முறையே வணிகமாக மாறிவிட்டதாகவும், பல லட்ச ரூபாய்க்கு வினாத்தாள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். வினாத்தாள் கசிவை தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அந்த அமைப்பை உடனடியாக கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Newsletter

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...