குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.


Coimbatore: கோவை: குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறுகையில், “எங்கள் கூட்டமைப்பின் சார்பில் அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து பல்வேறு தொழில் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தோம். குறிப்பாக குறு, சிறு தொழில் முனைவோரின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினோம்” என்றார்.

மேலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள SGST வணிகவரி துறை, 2007 முதல் 2022 வரை முடிக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் கோரி, ஆயிரக்கணக்கான தொழில் முனைவோருக்கு அபராதம் விதித்து வருவதாகவும், பழைய கணக்குகளை சமர்ப்பிக்க கடுமையான நெருக்கடி அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

“பல ஆண்டுகளுக்கு முந்தைய கணக்குகளை கேட்டு தொழில் முனைவோருக்கு நோட்டீஸ் அனுப்புவதற்குப் பதிலாக, நடப்பு கணக்குகளை மட்டும் சரிபார்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்,” என ஜேம்ஸ் தெரிவித்தார்.

தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து முதலமைச்சருடன் பேசி தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவுவதாக அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்ததாக, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் சவுந்தரகுமார், ரவீந்திரன், சுரேந்திரன், சுரேஷ், பாண்டியன், சங்கரநாராயணன், சாகுல் ஹமீது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...