குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.


Coimbatore: கோவை: குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறுகையில், “எங்கள் கூட்டமைப்பின் சார்பில் அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து பல்வேறு தொழில் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தோம். குறிப்பாக குறு, சிறு தொழில் முனைவோரின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினோம்” என்றார்.

மேலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள SGST வணிகவரி துறை, 2007 முதல் 2022 வரை முடிக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் கோரி, ஆயிரக்கணக்கான தொழில் முனைவோருக்கு அபராதம் விதித்து வருவதாகவும், பழைய கணக்குகளை சமர்ப்பிக்க கடுமையான நெருக்கடி அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

“பல ஆண்டுகளுக்கு முந்தைய கணக்குகளை கேட்டு தொழில் முனைவோருக்கு நோட்டீஸ் அனுப்புவதற்குப் பதிலாக, நடப்பு கணக்குகளை மட்டும் சரிபார்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்,” என ஜேம்ஸ் தெரிவித்தார்.

தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து முதலமைச்சருடன் பேசி தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவுவதாக அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்ததாக, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் சவுந்தரகுமார், ரவீந்திரன், சுரேந்திரன், சுரேஷ், பாண்டியன், சங்கரநாராயணன், சாகுல் ஹமீது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...