நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.


Coimbatore: தமிழர்களின் தொன்மையான சோழர் வரலாற்றுப் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் விஜய் இதுவரை எந்தவித பாராட்டும் தெரிவிக்காதது ஏமாற்றமளிப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழகத்திலிருந்து தாயகம் திரும்பியிருப்பது தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சம்பவம் என்றும், ஆனால் மாநில முதலமைச்சர் இதுகுறித்து மௌனம் காக்கிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

“தமிழ் பண்பாட்டையும் சோழர் வரலாறையும் உலக அரங்கில் மீண்டும் உயர்த்திய பிரதமருக்கு ஒரு வார்த்தை நன்றி கூட தெரிவிக்காதது வெறும் மறதி அல்ல; அது திட்டமிட்ட அலட்சியம் போல தெரிகிறது” என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

மேலும், செப்பேடுகள் தமிழகத்திற்கு வரும் நாளை அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பதிவில், “இந்தியர் அனைவருக்கும் இது ஒரு மகிழ்ச்சிகரமான தருணம். 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்ப வருகின்றன. இதனை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் ராப் ஜெட்டனுடன் இணைந்து பங்கேற்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளைக் கொண்ட இந்த செப்பேடுகளில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளில் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன், தனது தந்தை முதலாம் ராஜராஜ சோழன் வழங்கிய வாய்மொழி வாக்குறுதியை முறைப்படுத்தியதற்கான சான்றுகளாக இவை விளங்குகின்றன. சோழர்களின் பெருமை, கலாச்சாரம் மற்றும் கடற்படை திறனை இந்தியர்கள் பெருமையுடன் நினைவுகூர்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், “இந்த செப்பேடுகளை பல ஆண்டுகளாக பாதுகாத்து வந்த நெதர்லாந்து அரசுக்கும், லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் கூறியுள்ளார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...