நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.


Coimbatore: தமிழர்களின் தொன்மையான சோழர் வரலாற்றுப் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் விஜய் இதுவரை எந்தவித பாராட்டும் தெரிவிக்காதது ஏமாற்றமளிப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழகத்திலிருந்து தாயகம் திரும்பியிருப்பது தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சம்பவம் என்றும், ஆனால் மாநில முதலமைச்சர் இதுகுறித்து மௌனம் காக்கிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

“தமிழ் பண்பாட்டையும் சோழர் வரலாறையும் உலக அரங்கில் மீண்டும் உயர்த்திய பிரதமருக்கு ஒரு வார்த்தை நன்றி கூட தெரிவிக்காதது வெறும் மறதி அல்ல; அது திட்டமிட்ட அலட்சியம் போல தெரிகிறது” என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

மேலும், செப்பேடுகள் தமிழகத்திற்கு வரும் நாளை அரசு சார்பில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பதிவில், “இந்தியர் அனைவருக்கும் இது ஒரு மகிழ்ச்சிகரமான தருணம். 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்ப வருகின்றன. இதனை ஒட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் ராப் ஜெட்டனுடன் இணைந்து பங்கேற்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளைக் கொண்ட இந்த செப்பேடுகளில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளில் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன், தனது தந்தை முதலாம் ராஜராஜ சோழன் வழங்கிய வாய்மொழி வாக்குறுதியை முறைப்படுத்தியதற்கான சான்றுகளாக இவை விளங்குகின்றன. சோழர்களின் பெருமை, கலாச்சாரம் மற்றும் கடற்படை திறனை இந்தியர்கள் பெருமையுடன் நினைவுகூர்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், “இந்த செப்பேடுகளை பல ஆண்டுகளாக பாதுகாத்து வந்த நெதர்லாந்து அரசுக்கும், லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் கூறியுள்ளார்.

Newsletter

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...