கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடக்கோரி பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் (மார்க்சிஸ்ட்) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை : கோவை தடாகம் சாலை கோவில்மேடு பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக அகற்றக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

குறிப்பிட்ட அந்த டாஸ்மாக் கடைகள் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு அருகில் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுபோதையில் வரும் சிலர் சாலையில் தகராறு செய்வதும், ரோட்டில் விழுந்து கிடப்பதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், இதனால் மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அப்பகுதியில் பல்வேறு கோவில்களும் உள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை கருத்தில் கொண்டு, தமிழக அரசு மூடவுள்ளதாக அறிவித்துள்ள 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியலில் இந்த இரண்டு கடைகளையும் சேர்த்து உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...