கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் நலப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Coimbatore: பீளமேடு முருகன் கோயில் வீதியில் உள்ள நியாய விலை கடையைப் பார்வையிட்ட அவர், பொதுமக்களுக்குப் பொருட்கள் அனைத்தும் சரியாகக் கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். 



தொடர்ந்து, பீளமேடு அவிநாசி பிரதான சாலை EB அலுவலகம் முன்பு சாலையோரத்தில் இருந்த குப்பைகள் சுத்தம் செய்யப்பட்ட பணியைப் பார்வையிட்டு, அங்கு பொதுமக்கள் குப்பை கொட்டுவதைத் தவிர்க்க 'விழிப்புணர்வு பிளக்ஸ்' வைக்குமாறு வார்டு சூப்பர்வைசருக்கு அறிவுறுத்தினார்.



மேலும், பாரதி காலனி 4-வது வீதி மற்றும் கோபால் நகர் ஆகிய பகுதிகளில் தினசரி குப்பை வாங்கும் தள்ளுவண்டி மற்றும் ஆட்டோக்கள் சரியாக வருகிறதா என ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைப் பிரித்து வழங்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்திய அவர், சாலையோர மரக்கழிவுகளைத் தினசரி சுத்தம் செய்யத் தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். 



அதனைத் தொடர்ந்து, சாந்தி நகர் பகுதியில் நடைபெற்ற சாக்கடை தூய்மைப் பணிகளை நேரில் பார்வையிட்டு, சாக்கடையை முழுமையாகச் சுத்தம் செய்ய உத்தரவிட்டார். 



இந்த ஆய்வுகளின் போது நியாய விலை கடை ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் செந்தில்குமார் (27அ வட்ட பொறுப்பாளர்), தேவி (BLA2) உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...