கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்கு தொடர்பு எண்களை வெளியிட்டுள்ளார். கோடைகாலத்தில் சீரான குடிநீர் விநியோகத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.


Coimbatore: தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய 5 மண்டலங்களுக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




குறிப்பாக தற்போதைய கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி சீரான இடைவேளையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளும் சரி செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.




பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் தொடர்பான குறைகள் இருப்பின், வாட்ஸ் அப் எண் 819000 00200 மற்றும் கிழக்கு மண்டலம் (East Zone): 89258 40945, மேற்கு மண்டலம் (West Zone): 89259 75981, வடக்கு மண்டலம் (North Zone): 89259 75980, தெற்கு மண்டலம் (South Zone): 90430 66114, மற்றும் மத்திய மண்டலம் (Central Zone): 89259 75982 ஆகிய எண்களில் குறைகள் மற்றும் புகார்களை தெரிவித்துக் கொள்ளலாம்.




குடிநீர் விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran தெரிவித்துள்ளார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...