கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்டவாள பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை 7 சிறார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோவை:

சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் செயல்படும் கோவை, வடகோவை, போத்தனூர், திருப்பூர் உள்ளிட்ட 93 ரயில் நிலையங்கள் உள்ளன. சமீப காலமாக இருகூர் - போத்தனூர், கோவை - வடகோவை மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளுக்கு இடையேயான ரயில் வழித்தடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த ஆண்டில் ஒண்டிப்புதூர் மற்றும் ப்ரூக்ஃபீல்டு பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த மூன்று சம்பவங்களில், வந்தே பாரத் ரயிலின் கண்ணாடி மற்றும் இன்ஜின் விளக்குகள் சேதமடைந்ததுடன், சரக்கு ரயிலும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவங்களில் தொடர்புடையதாக 7 சிறார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ரயில்கள் மீது கல்வீச்சு நடத்துவது மனித உயிருக்கும் ரயில்வே பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறினர்.

மேலும், சிறார்களின் செயல்களுக்கு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களும் பொறுப்பேற்க வேண்டி வரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் மீது கல்வீச்சு தொடர்பான புகார்களை 139 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...