கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்டவாள பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை 7 சிறார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோவை:

சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் செயல்படும் கோவை, வடகோவை, போத்தனூர், திருப்பூர் உள்ளிட்ட 93 ரயில் நிலையங்கள் உள்ளன. சமீப காலமாக இருகூர் - போத்தனூர், கோவை - வடகோவை மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளுக்கு இடையேயான ரயில் வழித்தடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த ஆண்டில் ஒண்டிப்புதூர் மற்றும் ப்ரூக்ஃபீல்டு பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த மூன்று சம்பவங்களில், வந்தே பாரத் ரயிலின் கண்ணாடி மற்றும் இன்ஜின் விளக்குகள் சேதமடைந்ததுடன், சரக்கு ரயிலும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவங்களில் தொடர்புடையதாக 7 சிறார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ரயில்கள் மீது கல்வீச்சு நடத்துவது மனித உயிருக்கும் ரயில்வே பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், சம்பவங்கள் நடைபெறும் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறினர்.

மேலும், சிறார்களின் செயல்களுக்கு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களும் பொறுப்பேற்க வேண்டி வரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் மீது கல்வீச்சு தொடர்பான புகார்களை 139 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...