கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வேன் டிரைவரை கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை:

பெங்களூருவில் வேலை செய்து வரும் பெண், தனது 6 வயது மகளை கோவையில் உள்ள தனது பெற்றோருடன் தங்க வைத்து பள்ளிக்கு அனுப்பி வந்துள்ளார்.

இந்த நிலையில், கோடை விடுமுறைக்காக சிறுமியை பெங்களூருவிற்கு அழைத்துச் சென்றபோது, குழந்தை சிறுநீர் கழிக்கும் போது வலி இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து குழந்தையிடம் தாய் விசாரித்தபோது, முதலாம் வகுப்பு படித்த காலத்திலிருந்தே பள்ளி முடிந்த பிறகு மாலை நேரங்களில் பள்ளி மைதானத்தில் வைத்து வேன் டிரைவர் கணேசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.

மேலும், யாரிடமும் சொல்லக்கூடாது என அவர் சிறுமியை மிரட்டி, சாக்லேட் கொடுத்து ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், பெங்களூருவில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அவர் கோவை புலியகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், பள்ளி வேன் டிரைவர் கணேசனை கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...