கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ விக்னேஷ், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்றால் பொதுமக்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிடுவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை:

அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்ட தமிழக வெற்றிக்கழக (தவெக) வேட்பாளர் விக்னேஷ் அபார வெற்றி பெற்று அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளார்.



இந்நிலையில், கோவை சுந்தராபுரம் பகுதியில் அமைந்துள்ள அவரது சட்டமன்ற அலுவலகத்திற்கு வந்த விக்னேஷுக்கு தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய அவர், தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணும் வகையில் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷ், கிணத்துக்கடவு தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என உறுதியளித்தார். சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட தனிப்பட்ட செலவுகளுக்காக பயன்படுத்த மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

மேலும், கோவை மாவட்டத்தின் ஒவ்வொரு தொகுதியும் தனித்துவம் கொண்டது போல, கிணத்துக்கடவையும் அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட முன்னேற்றமான தொகுதியாக மாற்றுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்பாக, மது மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாட்டை முழுமையாக ஒழிப்பதே தனது இலட்சியம் என கூறிய அவர், கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றால், பொதுமக்களை திரட்டி காவல் நிலையத்தை முற்றுகையிடுவேன் என எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், நீண்டகாலமாக சர்ச்சையாக இருந்து வரும் வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பிரச்சினைக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...